பதிவு செய்த நாள்
06
ஜூலை
2023
11:07
வாரணாசி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று அதிகாலை வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திரில் ருத்ராபிஷேகம் மற்றும் ஷோடஷோபசார பூஜைகளை நடத்தினார்.
உத்தரபிரதேச மாநிலம் சென்ற சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்தி வந்தார். வாரணாசி வந்த சுவாமிக்கு மந்திர் துவாரில், கோவில் பண்டிதர்கள் மற்றும் ஆணையர், அறங்காவலர்களால் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திர் கர்ப கிரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுவாமிகள் ருத்ராபிஷேகம் மற்றும் பட்டு வஸ்திரம், ரஜத வில்வம், ஸ்வர்ணபுஷ்பம் கொண்டு சிறப்பு பூஜைகளை செய்தார். வழிபாட்டிற்கு பின் ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளைக்கு சுவாமிகள் சென்றனர். இங்கு இன்று ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை தங்கி விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
முன்னதாக நேற்று 5ம் தேதி காசி ராமன் விலாசத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு காசி மேயர் தலைமையில் காசி பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இதே ராமன் விலாசத்தில் தான் பூஜ்ய பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.