செங்கல் சிவபார்வதி கோவில் பலி தர்ப்பண நிகழ்ச்சி வரும்17ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 11:07
களியக்காவிளை:
செங்கல் சிவபார்வதி கோவிலில் ஆடி மாத பலி தர்ப்பண நிகழ்ச்சிகள் நடத்துவது
தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. ஆடி மாதம் அம்மன்
கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். இம்மாதம்
அம்மன் கோவில்களில் பூஜைகள், ஹோமங்கள் நடத்தி அம்மனிடம் வேண்டுதல் வைத்தால்
நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இவ்வருடபலி தர்ப்பண நிகழ்ச்சி
வரும் 17ம் தேதி நடக்கிறது. செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஆடி மாத சிறப்பு
பூஜைகள் மற்றும் இவ்வருடபலி தர்ப்பண நிகழ்ச்சி நடத்துவதற்கான ஆலோசனை
கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த
சரஸ்வதி தலைமை வகித்தார். கேரள விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர்வி.ஜி.
தம்பி திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கோவில் மேல்சாந்தி குமார்
முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு
அதிகாரிகள் பங்கேற்றனர். ஜூலை 17ம் தேதி காலை 5 மணி முதல் கோவில் ஆறாட்டு
கடவான காஞ்சிரம்மூடு கடவில் பலி தர்ப்பணம் நடத்தப்படும். தர்ப்பணத்திற்காக
வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்த தர தீர்மானிக்கப்பட்டது.