மயிலாடுதுறை பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 12:07
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட திருஇந்தளூர் காமராஜர் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயம் பால்குடம் மற்றும் காவடி திருவிழா என்று விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடி மேளதாள வாக்கியங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு வீடாக பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து பால்குடம் கோயிலை சென்றடைந்தது. அங்கு ஸ்ரீ பத்ரகாளியம்மன் சுவாமிக்கு பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பால் குடத்தால் பாலபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கரக உற்சவம் இன்று இரவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.