Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ... புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவிற்கு காத்திருக்கும் சவாலான கோரிக்கைகள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மஹோற்சவ விழாவில் மஹாபாரத தெருக்கூத்து
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மஹோற்சவ விழாவில் மஹாபாரத தெருக்கூத்து

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2023
01:07

திருவொற்றியூர், திருவொற்றியூர் - காலடிப்பேட்டை, வன்னியர் தெருவில், பழமையான திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் அக்னி வசந்த மஹோற்சவ விழா நடப்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு விழா, ஜூன் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை வேளைகளில், சுவாமி திருவீதி உலா நடந்தது. விழா நாட்களில், காலை மற்றும் மாலை வேளைகளில், போத்தராஜா ஊர்வலமும் நடைபெறும். இந்த கோவில் திருவிழாவின் 11 நாட்கள் சிறப்பை, உற்சவர் அலங்காரம், மஹாபாரத விரிவுரை, கவிபாடுதல் மற்றும் தெருக்கூத்து வாயிலாக, பக்தர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி, விபூதி வள்ளல் தொண்டர் புலவர் கோவிந்தசாமி, மஹாபாரத விரிவுரையும், இசைமாமணி தேவேந்திரன் பாடுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன.

பாராட்டு: மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து குழு சார்பில், 10 நாட்கள் மஹாபாரத கூத்து நடந்தது. இரவு 10:00 மணிக்கு மேல் ஆரம்பித்து, விடிய விடிய நடக்கும் கூத்தை காண, மக்கள் திரள்கின்றனர். மொபைல் போனில் மூழ்கி போன இன்றைய தலைமுறையினருக்கு, 10 நாட்கள் மஹாபாரத தெருக்கூத்து, வினோதமாகவும், மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு பின், தெருக்கூத்து நிகழ்வை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொண்ட ஆலய நிர்வாகத்தினரை, அனைவரும் பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar