திருவண்ணாமலை: புது வாணியங்குளத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.