மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு சிவனுக்கு முன்புறம் நந்தி இருப்பதோடு பின்புறமும் ஒரு நந்தி உள்ளது. தீர்க்கவாகு முனிவர் வழிபட்ட இக்கோயிலில் கருவறை மேற்கு நோக்கி உள்ளது. தீர்க்கவாகு என்பதற்கு ‘நீண்ட கைகள் கொண்டவர்’ என்பது பொருள். சிவபெருமானுக்கு அபிேஷகம் செய்வதற்காக கங்கையை பெற கைகளை நீட்டிய போது அவை குறுகியதால் ‘குறுக்கை’ எனப் பெயர் வந்தது. தற்போது ‘கொருக்கை’ என்றாகி விட்டது. பிரகாரத்தில் தீர்க்கவாகு முனிவர் சன்னதி உள்ளது. சிவன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த தலம் இது. மன்மதனின் சாம்பல் இங்கு படிந்ததால் கோயில் அருகில் விபூதி நிறத்தில் மணல் படிந்துள்ளது.