பதிவு செய்த நாள்
12
ஜூலை
2023
05:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டத்துடன் நடக்கும் ஆடித்திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆண்டுதோறும் ஆடிமாத பவுர்ணமியையொட்டி இங்கு 13 நாள் திருவிழா நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா, திருப்பணி காரணங்களால் தேரோட்டம் நடக்கவில்லை. கோயில் வளாகத்திற்குள்ளாக எளிமையாக திருவிழா நடத்தப்பட்டது. கடந்த பிப்.1ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இந்தாண்டு திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு துவங்கி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணியளவில் மண்டகபடிதாரர்கள் சார்பிலான சிறப்பு வழிபாடும், அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 30ல் திருக்கல்யாணம், ஆக.1ல் திருத்தேரோட்டம், ஆக.3ல் முத்துபல்லக்கு திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முருகன், விழா குழுவினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.