Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓம் நமோ பகவதே ருத்ரே: அமர்நாத் பனி ... மருநூத்து காளியம்மன் கோவில் மண்டல பூஜை 108 சங்காபிஷேகம் மருநூத்து காளியம்மன் கோவில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுர பணிகள் ஜரூர்
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுர பணிகள் ஜரூர்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2023
03:07

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள், துரிதமாக நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இங்கு வார நாட்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் கோவில் முன்பு ராஜகோபுரம் அமைக்கும்படி, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை அடுத்து, 2017ம் ஆண்டு, ஏழுநிலை ராஜகோபுரம், ஒன்றரை கோடி ரூபாய் செலவில், கட்டும் பணிகள் துவங்கின. ஆனால் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றம், ஜி.எஸ்.டி., பிரச்னையால், ராஜகோபுரம் கட்டும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நின்று இருந்தன.

இந்நிலையில் நன்கொடையாளர்கள், ராஜகோபுரத்தை கட்டிக் கொடுக்க முன் வந்ததை அடுத்து, தமிழக அரசு ஹிந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, ராஜகோபுரம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். தற்போது கோபுரத்தில், கல்கார பணிகள் நடைபெறுகின்றன. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து, பணியாளர்களிடம், பணிகளை விரைவாக செய்யும்படி அறிவுரை வழங்கினார். மேலும் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, ஏழு நிலை ராஜகோபுர கட்டுமான பணிகளை கண்காணித்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar