Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசியில் ஆனி கார்த்திகை; விளக்கு ... ஆனி வெள்ளி: வலம்புரி விநாயகர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆனி வெள்ளி: வலம்புரி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியை தங்கமாக்கி டிபாசிட் செய்ய குருவாயூர் கோவில் நிர்வாகம் முடிவு
எழுத்தின் அளவு:
வெள்ளியை தங்கமாக்கி டிபாசிட் செய்ய குருவாயூர் கோவில் நிர்வாகம் முடிவு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2023
04:07

திருச்சூர்: கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகம், தங்களிடம் உள்ள வெள்ளி பொருட்களை தங்கமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

கேரளாவில் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ளது, உலகப் புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவில். கோவிலை நிர்வகிக்கும் குருவாயூர் தேவஸ்வம், பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ள வெள்ளி பொருட்களை, ஒரு அறையில் வைத்து பராமரித்து வருகிறது. இந்த வெள்ளிப் பொருட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மத்திய அரசின், மின்ட் எனப்படும் நாணயம் தயாரிக்கும் ஆலையின் உதவியை நாடியுள்ளது. இதன்படி கோவில் வசம் உள்ள, 5,000 கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளி பொருட்கள் அங்கு உருக்கப்பட்டு, வெள்ளி கட்டிகளாக மாற்றப்படும். பின், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய ஆலையில், இந்த வெள்ளி கட்டிகளின் மதிப்புக்கு இணையான தங்கம் வாங்கப்படும். அவ்வாறு வாங்கப்படும் தங்கக் கட்டிகள், மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலத்தில், டிபாசிட் செய்யப்படும்.

சமீபத்தில், கோவில் நிர்வாகம், தன்னிடம் உள்ள தங்க நகைகளை, தங்கக் கட்டியாக மாற்றி, பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்தது. இதன் வாயிலாக, ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வட்டியாக கிடைக்கிறது. அதுபோலவே, தற்போது வெள்ளியை தங்கமாக்கி, அதன் வாயிலாக வட்டி பெற திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, குருவாயூர் கோவில் நிர்வாகம் பதிலளித்தது. இதில், கோவில் நிர்வாகம், 1,700 கோடி ரூபாயை வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளதாகவும், 263 கிலோ தங்க நகைகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar