தேனி: உத்தமபாளையம் சுருளிதீர்த்தத்தைச் சேர்ந்த பூசாரி முருகன், கலெக்டர் பழனிசாமியிடம் கொடுத்த மனு: சுருளி தீர்த்தம், சுருளியாண்டவர் கோயில் அடிவாரத்தில் சிவன் கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் இடிக்கப்பட்டது. சாமி சிலையை மட்டும் வெட்டவெளியில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.