Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஊர்மேலழகியானில் ஷீரடி சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரகதீஸ்வரர் கோவில் சீரமைக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2012
10:10

க.பரமத்தி: பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், புதர்மண்டி கிடக்கும், மோளப்பாளையம் மரகதீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் முன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மோளப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மரகதீஸ்வரர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோவிலில், உள்ள, ஒன்பது நவகிரகங்களை வழிபட, ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி தோறும், உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர். ஆனால், பல ஆண்டுகளாக கோவில் சீரமைக்கபடாமல் உள்ளது. மேலும், கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம். ஆனால், கடந்த, 30 ஆண்டுகளாக தேரோட்டமும் நடக்கவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த, 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ராமசாமி, அப்போதைய மாவட்ட கலெக்டர் அண்ணாமலை ஆகியோர் கோவிலை ஆய்வு செய்து, "" நாள் தோறும் மூன்று காலபூஜை நடத்தவும், பக்தர்களுக்கு வசதிக்காக குடிநீர் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும், என, தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்øயும் எடுக்கப்படவில்லை. எனவே, பழமையும், பெருமையும் வாய்ந்த மரகதீஸ்வர் கோவிலை சீரமைக்க, தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar