பதிவு செய்த நாள்
05
அக்
2012
10:10
க.பரமத்தி: பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், புதர்மண்டி கிடக்கும், மோளப்பாளையம் மரகதீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் முன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மோளப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மரகதீஸ்வரர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோவிலில், உள்ள, ஒன்பது நவகிரகங்களை வழிபட, ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி தோறும், உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர். ஆனால், பல ஆண்டுகளாக கோவில் சீரமைக்கபடாமல் உள்ளது. மேலும், கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம். ஆனால், கடந்த, 30 ஆண்டுகளாக தேரோட்டமும் நடக்கவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த, 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ராமசாமி, அப்போதைய மாவட்ட கலெக்டர் அண்ணாமலை ஆகியோர் கோவிலை ஆய்வு செய்து, "" நாள் தோறும் மூன்று காலபூஜை நடத்தவும், பக்தர்களுக்கு வசதிக்காக குடிநீர் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும், என, தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்øயும் எடுக்கப்படவில்லை. எனவே, பழமையும், பெருமையும் வாய்ந்த மரகதீஸ்வர் கோவிலை சீரமைக்க, தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.