Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் ... ஆடி முதல் நாள்: கோயில்களில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு ஆடி முதல் நாள்: கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடி முதல் அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் ஆனி பிரதோஷம் மற்றும் ஆடி மாதம் முதல் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை மலை அடிவாரத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயில் கொளுத்திய நிலையிலும் மதியம் 2:00 மணி வரை சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  போதிய மழையின்றி வனப்பகுதி வறண்டு கிடக்கும் நிலையில், கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உடனடியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மலையில் கோயில் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடி முதல் அமாவாசை நாளான இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் சரக வனத்துறையினர் மலையில் வழித்தட பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை அருகே ராஜராஜன் பெயரில் இருந்த சிவலிங்கத்தை, தொல்லியல் வல்லுனர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar