* அமைதியான மனதில் நல்ல சிந்தனைகள் ஓடும். * நாவை அடக்கினால் தீய உணர்வுகளை அடக்க முடியும். * இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம்தான். * நன்மையை மட்டுமே நாணம் தரும். * கொடுமைக்கு ஆளானவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனென்றால் அந்த பிரார்த்தனைக்கும், இறைவனுக்கும் இடையில் திரை கிடையாது. * தவறுதலாக தீமை செய்தால் அதை அழிக்க நன்மையைச் செய்யுங்கள். * கெட்ட நண்பனுடன் இருப்பதை விட தனிமையாய் இருப்பதே மேல். * காலத்தைக் கணிப்பதற்கும் வெளிச்சத்தை தருவதற்கும்தான் சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன. * மறுமைநாளை ஏற்றுக்கொள்பவர்கள் பிறருக்கு நல்லவற்றைக் கூறவும். – பொன்மொழிகள்