* பிறர் மீது அன்பாக இருங்கள். அதுதான் உண்மையான தெய்வீகமாகும். * பக்தியின் மூலம் முடியாத செயலையும் முடிக்கலாம். * எந்த அளவுக்கு பற்று இல்லாமல் இருக்கிறாயோ அந்த அளவுக்கு மனம் அமைதியாகும். * கடவுளிடம் சரணடைந்துவிட்டால் அவரே உன் வாழ்க்கையை பார்த்துக்கொள்வார். * மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதே. உன் தவறுகளை சரிசெய். * பொறுமையாக இரு. அதுவே உனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். * பொறுமைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. * சொற்களால் யாரையும் காயப்படுத்தாதே. * ஒரு செய்தி உண்மையாய் இருந்தாலும் அது பிறர் விரும்பவில்லையெனில் கூறாதே. * மேகத்தை காற்று விலக்குவதுபோல் கடவுளின் துணையுடன் உலகப்பற்றைத் துறந்துவிடு. * தைரியத்தை இழக்காமல் பிரார்த்தனை செய். உரிய காலத்தில் வேண்டியவை கிடைக்கும். * சாதனைக்கேற்ற காலம் இளமைப் பருவமே. அதை வீணடிக்காதே. * உண்மையான அன்பின்றி கடவுளை உணர முடியாது. * சோம்பல் குணத்தினால் உடலும் மனமும் கெடுகிறது. * மன அமைதிக்கு நிகரான புதையல் இல்லை. * மனபலத்துக்கு நிகரான நல்லொழுக்கமும் இல்லை.