Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் ... காரைக்குடியில் நகரத்தார் சார்பில் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் காரைக்குடியில் நகரத்தார் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம்: ஜூலை 23ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம்: ஜூலை 23ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
04:07

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா ஜூலை 23 இரவு அனுக்கையுடன் துவங்க உள்ளது. பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பிரம்மோற்சவ விழா மதுரை அழகர் கோவிலைப் போன்று நடப்பது வழக்கம். இதன்படி ஜூலை 24 காலை 9:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்பட்டு விழா துவங்குகிறது. அன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் மோகினியாக வீதி வலம் வருகிறார். தொடர்ந்து காலை ஏகாந்த சேவையிலும் இரவு 7:00 மணிக்கு சிம்ம, சேஷ, கருட, ஹனுமன் உள்ளிட்ட வாகனங்களில் பல்வேறு அவதாரங்களில் அருள்பாலிக்கிறார். ஜூலை 29 இரவு 7:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் அலங்காரமாகிறார். பின்னர் இரவு 8:00 மணிக்கு கோயில் வளாகத்தில் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் பூப்பல்லக்கில் வலம் வருகிறார். ஜூலை 31 காலை நவநீத கிருஷ்ணன் அலங்காரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் அருள் பாலிப்பார். ஆக., 1 காலை 10:31 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் ஆடி தேரோட்டம் நடக்கிறது. ஆக., 2 காலை தீர்த்தவாரி மற்றும் இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையுள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். இரவு 10:00 மணிக்குமேல் ஐந்து கருட சேவை துவங்கியது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதிகள் மற்றும் ரத வீதிகளை சுற்றி வந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனையுடன் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாமக்கல்; ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ... மேலும்
 
temple news
திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar