Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் பாசி படிந்து ... காளஹஸ்தி சிவன் கோயிலில் பாஜக ராஜசபா உறுப்பினர் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் பாஜக ராஜசபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேராசை பிடித்தவர்களிடம் இருந்து கோயில் சொத்தை மீட்க உத்தரவு
எழுத்தின் அளவு:
பேராசை பிடித்தவர்களிடம் இருந்து கோயில் சொத்தை மீட்க உத்தரவு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
05:07

சென்னை : தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் தெற்கு மாட வீதியில் உள்ள சொத்தை பதிவு செய்ய ஆயிரம்விளக்கு சார் பதிவாளருக்கு உத்தரவிடவும் பட்டா கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க தாசில்தாருக்கு உத்தரவிடவும் கோரி உயர் நீதிமன்றத்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞரின் நீண்ட வாதத்துக்கு பின் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் ஆஜரானார். அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டு பின் வாபஸ் பெறப்படுகிறது. இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: அறநிலையத் துறை மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு தெரியாமல் கோவில் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் பேராசை பிடித்தவர்கள் ஈடுபடுகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார். அறங்காவலராக இருந்தவர் கோவில் சொத்துக்களை சட்டவிரோதமாக விற்றதாகவும் மோசடியாக சொத்து பரிமாற்றம் நடந்ததால் பத்திரப்பதிவு அதிகாரியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகவும் அறநிலையத் துறை சிறப்பு பிளீடர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுதும் பெருமளவு கோவில் சொத்துக்கள் கோவில் அதிகாரிகள் மற்றும் அறநிலையத் துறைக்கு தெரியாமலேயே சட்டவிரோதமாக உரிமை மாற்றம் செய்யப்படுகின்றன. அறங்காவலர்கள் அல்லது கோவில் நிர்வாகத்தினர் கோவில்களுக்கு வழங்கப்படும் நன்கொடையை மறைத்து விடுகின்றனர். எனவே அதிகாரிகள் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். ஆவணங்களை சேகரித்து முறையான விசாரணை நடத்தி கோவில் சொத்துக்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறையுடன் இணைந்து கோவில் அதிகாரிகளும் சொத்துக்களை மீட்க தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூரில் விண்ணிலிருந்து போர் புரிந்த கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. மிகவும் ... மேலும்
 
temple news
கோவை : சுண்டைக்கா  முத்தூர் பை-பாஸ் ரோடுபொட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் திருக்கோயில் யானை பவானிக்கு ரூ. 43 லட்சத்தில் மணிமண்டபம் கட்டும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar