விழுப்புரம் 18 அடி உயர மகா மாரியம்மன் சிலை கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 01:07
விழுப்புரம் : விழுப்புரம் மேலவீதி காட்பாடி ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவிலில் 18 அடி உயர மகா மாரியம்மன் சிலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, 18அடி உயர மகா மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.