மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் நாளை ஆடி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 04:07
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் கோவிலில் நாளை 21ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித்தபசு திருவிழா துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்க்கான திருவிழா நாளை 21ம் தேதி காலை 800 மணியிலிருந்து 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நாட்களின் போது சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் தினந்தோறும் சிம்மம், அன்னம், கமலம், யானை, கிளி, விருஷபம் காமதேனும், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பின்னர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.31ம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் இந்தாண்டிக்கான ஆடித் திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.