கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்த சாய் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 04:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பிரதிபலன் எதிர்பாராமல் காலணி பாதுகாப்பு உட்பட பல்வேறு சேவை செய்த ஸ்ரீ சத்தியசாயி சேவா சமிதி உறுப்பினர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
பெரியகுளம் வடகரையில் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி கன்வீனர் விஜயகுமார், உறுப்பினர்கள் தீனதயாளன் மோகன் பாரதிராஜா அசோக் குமார் மற்றும் 10 பெண்கள் உட்பட 30 பேர் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஜூலை 18, 19 இரு தினமும் இலவச காலணி பாதுகாப்பு சேவை, நீர் மோர் வழங்குதல், வயதில் மூத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுதல் உட்பட பிரதிபலன் எதிர்பாராத மனிதநேய சேவையை நிகழ்த்தினர். திருவிழாவுக்கு வரும் பக்தர்களில் சிலர் தங்களது காலணிகளை தொலைப்பது வழங்கம். கோயில் நிர்வாகத்தில் இருந்து இலவச காலணி பாதுகாப்பு சேவை இல்லை.
பாராட்டுதலுக்குரிய சேவை: திருவிழாவிற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களில் பலரும் காலணிகளை ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியினர் புன்முறுவலுடன் காலணிகளை பெற்று டோக்கன் வழங்கி திரும்ப வழங்கினர். கொரோனா காலத்தை தவிர்த்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவைகளை செய்து வருகின்றனர். இவர்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.