திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்; பெண்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 06:07
கடலூர் : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று (20ம் தேதி) காலை நடைபெற்றது.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பெரியநாயகி அம்மன் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று ஆடிப்பூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்மன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின் உற்சவர் பெரியநாயகி அம்மன் தேரில் எழுந்தருளினர். அம்மனை வழிபட்டு ஏராளமான பெண்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர்.