சொரப்பூர் திரவுபதியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 06:07
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் திரவுபதியம்மன் கோவில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நேற்று நட ந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மிழக பகுதியான சொரப்பூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கட ந்த மே 31ம் தேதி நடந்தது. அன்று முதல் மண்டல அபிஷேகம் துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. கடந்த 16ம் தேதி 45வது நாளான மண்டல அபிஷேக விழா நட ந்தது. 48 வது நாளான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதனையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை , எஜமான் சங்கல்பம், க லசபூஜை, திரவியாவதி ஹோமம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கலசாபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. மாலை திரவுபதியம்மன் மாடவீதியுலா நடந்தது.