பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.65 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 12:07
பழநி: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.65 கோடி கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது இதில் காணிக்கையாக 1.025 கிலோ தங்கம், 13.573 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874, மற்றும் 878 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.