இடையன்காளி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 03:07
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கொத்தங்குடி உள்ள இடையன்காளி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்று சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன. இடையன்காளி அம்மனுக்கு அமுது ஊட்டுதலை தொடர்ந்து அருளாளர் பொய்யாமொழி ராமன் அருள்வாக்கு அருளினார். இதனைத் தொடர்ந்து பல ஊர்களிலும் இருந்தும் வந்திருந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.