பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் உப்பு கொட்டி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 03:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பீடத்தின் மீது உப்புக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் பீடத்தின் மீது உப்புக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.