கோட்டைக்கரை முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா; அலகு குத்தி, தீ மிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 03:07
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடி கோட்டைக்கரை முனிஸ்வரர் கோயில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இலுப்பைக்குடி கோட்டைக்கரை முனிஸ்வரர் கோயில் 35 ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த ஜூலை 17 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. தினமும், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் அழகு குட்டியும் பறவை காவடி எடுத்தும் தீ மிதிக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார். விழாவில் இலுப்பைக்குடி காரைக்குடி, அரியக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.