ஆடி வெள்ளி: அன்னூர் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 05:07
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூர், ஓதிமலை சாலையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான பெரியம்மன் கோவிலில் நேற்று மதியம் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, மாரியம்மன் கோவிலிலும், அங்காளம்மன் கோவிலிலும் நேற்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிள்ளையப்பம்பாளையத்தில் செல்வநாயகி அம்மன் கோவிலில் மதியம் அபிஷேக பூஜையும் மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், மூக்கனூர் சவுடேஸ்வரியம்மன் கோவில், கணேசபுரம் விளையாட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.