சூலூர்: சூலூர் அம்மன் கோவில்களில் நடந்த ஆடி வெள்ளி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி,, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் இன்று நடந்தன. சூலூர் மேற்கு அங்காளம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன், கரவழி மாதப்பூர் மாதங்கி அம்மன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பெண்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.