கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 166ம் ஆண்டு அவதார விழா: வரும் 31ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 05:07
கட்டிக்குளம் : மங்களகரமான காளயுக்தி வருடம் ஆடி மாதம் 1858ம் ஆண்டு பூர்வபட்சமும் சதுர்த்தசி நன்நாளில் கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதரித்ததை முன்னிட்டு, நிகழும் சோபகிருது வருடம் ஆடி மாதம் 15ம் தேதி 31.07.2023 திங்கள் கிழமை பூராட நட்சத்திரமும் சதுர்த்தசி திதியும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.45 மணிக்குமேல் 10.00 மணிக்குள் கட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் சிவாச்சாரியார்களால் சிறப்பு வேள்வியாகமும் பூர்ணாஹுதி பூஜை, அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் சிறப்பாக நடைபெற விருக்கிறது. அன்று இரவு 8.00 மணிக்கு பூப்பல்லக்கில் கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் திருவுருவம் வீதி உலா நடைபெறுகிறது.