திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் குளக்கரையிலுள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் அம்மனுக்கு வளையல், மஞ்சள் , குங்குமம், பூ, உள்ளிட்ட பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.