திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடந்தது.
இக்கோயிலில் ஆடி மாதத்தில் வயிரவருக்கு பிரமோற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 13 ல் கொடியேற்றத்துடன் பிரோற்ஸவம் துவங்கியது. தினசி காலை,இரவு நேரங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு வயிரவர் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு கோயிலிலிருந்து வயிரவர் வெள்ளி ரதத்தில் புறப்பாடாகி திருக்குள படித்துறையில் எழுந்தருளினார். தொடர்ந்து படித்துறையில் அஸ்திரத் தேவருக்கு சிவாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்து 8 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் குளத்தில் நீரில் மூழ்கி அஸ்திரத்தேவருக்கு சிவாச்சார்யரால் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து முளைப்பயிரை சிவாச்சார்யர் குளத்தில் நனைத்து விவசாயம் செழிக்க பிரார்த்தனை நடந்தது. நாளை காலை 9:15 மணிக்கு மகா அபிஷேகம் , மாலையில் திருக்கல்யாணம், இரவில் திருவீதி உலாவும் நடைபெறும்.