தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி சத்தியா கிரக சேவாஸ்ரமத்தில் 41 அடி விஸ்வரூப ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் மகா கும்பாபிஷேக ஜூன் 25ல் நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வரும் நிலையில் இன்று 28 வது நாள் மற்றும் ஆடி முதல் வார சனிக்கிழமையையொட்டி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்திருந்தார்.