அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, ஏழாவது வார்டு, போயம் பாளையம் கிழக்கு அவிநாசி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி பூரம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, இரணாடாயிரம் கண்ணாடி வளையல் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு கூல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.