பதிவு செய்த நாள்
23
ஜூலை
2023
08:07
போளூர்: போளூர் அருகே வெறும் கையில் சுட்டு, அம்மனுக்கு படையலிடப்பட்ட ஏழு வடை, 21,900 ரூபாய்க்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த துரிஞ்சிக்கப்பம், கீழக்குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி விழாவில், கோவில் பூசாரி, வெறும் கையில் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு, ஏழு வடைகள் சுடுவார். இவை அம்மனுக்கு படையலாக வைக்கப்படும். இதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பகத்ர்கள், போட்டி போட்டு வடையை ஏலம் எடுப்பர். இதன்படி முதலாவதாக சுட்ட வடை, 4,700 ரூபாய், 2-வது வடை, 3,800 ரூபாய், 3 மற்றும் 4-வது வடை தலா, 3,700 ரூபாய், 5-வது வடை, 3,300 ரூபாய், 6-வது வடை, 1,400 ரூபாய், 7-வது வடை, 1,300 ரூபாய் என, 21,900 ரூபாய்க்கு ஏலம் போனது. குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், குழந்தையின் எடைக்கு எடை துலாபாரம் செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.