செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் மலர்தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் பூபல்லக்கு விழா நடந்தது.
செஞ்சி மலர்தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு 35வது ஆண்டு பூ பல்லக்கு திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தனர். 9 மணிக்கு செண்டை மேளத்துடன் 108 பால்குடங்கள் ஊர்வலமும், 11 மணிக்கு மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் பூபல்லக்கில் பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை செஞ்சி மலர்தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.