உடையார்குடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2023 10:07
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் உள்ள உடையார்குடி பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவ விழா வெகு விமர்சையாக நடந்தது.
உடையார்குடி மாரியம்மன் கோவில் தீமிதி உற்வசவம் கடந்த 13 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இரவு மாரியம்மனுக்கு பல்வேறு திருக்கோலங்களில் வீதியுலாவுடன் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 21ஆம் தேதி திருத்தேர் நடந்தது. நேற்று முன்தினம் 22 ஆம் தேதி தீ மிதி உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்,பேரூராட்சி மன்ற தலைவர் கணேச மூர்த்தி, துணைத் தலைவர் ராஜேஸ்வரி மணிமாறன், சொர்ணம் அறிவழகன் ஆலய நிர்வாகிகள் உள்ளிட்நுடார் செய்திருந்தனர் தீமிதி விழாவிற்கு சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.