நயினார்கோவில் ஆடி திருவிழாவில் சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2023 11:07
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடி திருவிழாவில் சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.
நயினார்கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா ஜூலை 13 காலை கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இங்கு தினமும் சவுந்தர்ய நாயகி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஜூலை 21 காலை நான்கு மாடவீதிகளில் தேரில் அம்மன் வீதி வலம் நடந்தது. நேற்று தீர்த்த உற்சவம், யாக கும்பாபிஷேகம் மற்றும் மாலையில் மஞ்சள் விளையாட்டு நடந்தது. தொடர்ந்து இன்று காலை அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் கோயில் முன்பு நாகநாதசுவாமி பிரியா விடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார். அப்போது சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் வீதி உலா வந்து சுவாமி, அம்பாள் கோயில் அடைந்தனர். மாலை 6:00 மணிக்கு அம்பாள் கதிர் ஸ்தானம் செய்து, சயன திருக்கோலத்தில் இரவு 9:00 மணிக்கு பூ பல்லக்கில் வலம் வந்தார்.