Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி ... திருப்பரங்குன்றம் கோயில் இடத்தில் நந்தவனம் அமைக்க கோரிக்கை திருப்பரங்குன்றம் கோயில் இடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை; புதையலாக இருக்கலாம் என சந்தேகம்
எழுத்தின் அளவு:
பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை; புதையலாக இருக்கலாம் என சந்தேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2023
02:07

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை நெல்லியாலம் பகுதியை தலைமையிடமாக கொண்டு, ஆட்சி புரிந்தவர் ராணி போரம்மாள். இவரது கோட்டை இருந்த நெல்லியாளம் அருகே காக்கா தூக்கி அம்பலம் என்ற இடத்தில் சிவன் கோவில் கட்டி வழிபட்டு வந்தார். சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், மன்னர் ஆட்சி மறைந்த பின்னர் பூஜைகள் நிறுத்தப்பட்டு, கோவிலில் இருந்த பழமை வாய்ந்த உத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது. தொடர்ந்து மேல் கூரையும் சிதிலமடைந்த நிலையில், தற்போது நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் இணைந்து, கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மண்ணை எடுத்து வெளியே போட்டுள்ளது தெரியவந்தது. கோவில் கமிட்டியினர் பார்த்தபோது, மூலஸ்தானத்தில் சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு மண் மற்றும் பழமையான கற்கள் வெளியே எடுத்து போட்டு இருந்தது தெரிய வந்தது.

கோவில் கமிட்டி நிர்வாகி நவநீத ராஜா மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தங்க ஆபரணங்கள் மற்றும் சுதர்சன சக்கரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள், திப்பு சுல்தான் படையெடுப்பின் போது பாதுகாப்பாக வைப்பதற்காக மூலஸ்தானத்தில் குழிதோண்டி பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடும். அவை புதையலாக மாறி இருந்த நிலையில் அது குறித்து தகவல் தெரிந்த கும்பல் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இரவு நேரத்தில் குழி தோண்டி அவற்றை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவாலா போலீசார் மற்றும் பந்தலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பழமை வாய்ந்த சிவன் கோவில் மூலஸ்தானத்தில் குழி தோண்டி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 
temple news
நெகமம்; கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar