Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் ... அன்ன வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் வலம் அன்ன வாகனத்தில் நாச்சியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தில் விரிசல்: ரூ.67 லட்சத்தில் மராமத்து பணி செய்ய ஏற்பாடு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தில் விரிசல்: ரூ.67 லட்சத்தில் மராமத்து பணி செய்ய ஏற்பாடு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2023
04:07

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், 67 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட உள்ளது.

பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திகழ்கிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும், தினமும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ரெங்கா ரெங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் என நான்கு திசைகளிலும் நுழைவு வாயில்களுடன் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில், கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தை அடுத்து, ஏழு நிலைகளுடன் தாமோதர கிருஷ்ணன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தின் முதல் இரண்டு நிலைகளில் விரிசல் ஏற்பட்டு, காரை பெயர்ந்துள்ளது. இரண்டாவது நிலையில் விரிசல்களுடன், வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள  மரத்துாண்களும் சிதிலமடைந்துள்ளது. கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் அருகிலேயே கிழக்கு ரங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜன் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக செல்லும் மாணவ, மாணவியரும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்வதாக புகார் எழுந்தது. மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு வாசல் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணை ஆணையர் தகவல்: கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டவுடன், நன்கொடையாளர்களிடம் வசூல் செய்து, மராமத்து பணி துவங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான அவகாசம் இல்லாததால், அறநிலையத்துறை நிதியில் இருந்து, 67 லட்சம் ரூபாய் செலவில், மராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும், என்று ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உற்சவருக்கு ... மேலும்
 
temple news
கலியுக தெய்வம், கண்கண்ட தெய்வம், நடமாடும் தெய்வம் என போற்றப்படுபவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி, தேவலோகத்தின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar