* தினமும் பசுவுக்கு புல், அகத்திக்கீரை கொடு. இதுவே சிறந்த தர்மம். * ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் என்ன சிந்தனை உள்ளதோ அதுவே கடைசி காலத்தில் வரும். * வேதம் சம்பந்தமான செயல்களுக்கு உதவி செய். புண்ணியம் சேரும். * நீ எப்படி வாழ்கிறாயோ அப்படியே பிறரும் வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள். * சாப்பிடாமல் இருந்து கடவுளின் நாமத்தை சொன்னால் ஆன்மபலம் அதிகரிக்கும். * எட்டு முதல் எண்பது வயதுள்ளவர்கள் மாதந்தோறும் வரும் ஏகாதசி திதியில் விரதம் இருப்பது சிறப்பு. * பசி என்பது நோயைப் போன்றது. அதற்கு அளவான உணவை மருந்தாகக் கொடு. * சாப்பிடுவது, பேசுவது என வாய்க்கு இரு வேலை உண்டு. அதை பாதியாக குறை. மனபலம் கூடும். * முன்ஜென்மத்தில் செய்த வினைகளுக்கு ஏற்பவே தற்போது உனக்கு வாழ்க்கை அமைந்துள்ளது. * மனிதராக பிறந்தவர்கள் கடவுள், முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். * குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையை விதைத்தால், அது ஒரு நாள் முளைத்து விடும். * யாருக்கும் கஷ்டமும் வரக்கூடாது என நினைப்பதே உண்மையான அஹிம்சை. * அறிவு, அழகு, செல்வம் இவற்றில் எது உன்னிடம் இருந்தாலும் அதை எண்ணி கர்வப்படாதே.