* தைரியமாக முன்னேறிச் செல். வெற்றி கிடைத்தே தீரும். * லட்சியம் இல்லாதவர் எப்போதும் தவறுகள் செய்வார். * ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணி. * வெற்றிக்கு தேவை துாய்மை, பொறுமை, விடாமுயற்சி. * பிறர் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஒழுக்கம், பக்தியில் இருந்து நீ விலகாதே. * பொறுமை இல்லாதவன் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. * பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம். * நிறையப் பேசுவதை விட, அதில் ஒன்றையாவது செய். * எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. * கடலைப் போல ஆழமாக, வானத்தைப் போல பரந்து இருக்கும் இதயமே நமக்கு வேண்டும். * கீழ்ப்படியத் தெரிந்தவனுக்கு கட்டளையிடவும் தெரியும். * நீ பலமானவன். உனக்குள் தெய்வீக ஆற்றல் உள்ளது. * உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் செய்யாதே. * மனம் ஒருமுகப்படும்போதுதான் அதன் ஆற்றல் அதிகரிக்கும்.