Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்பர் மொமின் வரைந்த அனுமார் ... நவசக்தி மகா வாராகி அம்மன் கோயிலில் பைரவருக்கு அபிஷேகம் நவசக்தி மகா வாராகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் சாதுக்கள் திடீர் உண்ணாவிரதம்
எழுத்தின் அளவு:
வடலூரில் சாதுக்கள் திடீர் உண்ணாவிரதம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2023
12:07

வடலூர்: வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகராக அறிவிக்க கோரி சன்மார்க்க சாதுக்கள் சங்கம் சார்பில் வடலூர் சத்திய ஞான சபை எதிரே உள்ள தனியார் இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை , சத்திய தர்ம சாலை ஆகியன உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரம் தினத்தன்று ஜோதி தரிசனமும், தை மாதத்தில் தைப்பூச ஜோதி தரிசனமும் விமர்சையாக நடைபெறும். விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்வார்கள். வள்ளலார் வாழ்ந்த வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகராக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வடலூர் சன்மார்க்க சாதுக்கள் சங்கம் சார்பில் சத்ய ஞான சபை எதிரே உள்ள தனியார் இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் சாது சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சாதுக்கள் அரிகிருஷ்ணன், ராஜா,சதீஷ், ராமலிங்கம், ஸ்ரீதர், உட்பட 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 8.00 மணி முதல் உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து தகவலறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க கூடாது. உரிய அனுமதி வாங்கி இருங்கள் எனக்கூறினார்கள். இதனையடுத்து 12.30 மணிக்கு முறையாக அனுமதி வாங்கி மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி கலைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar