Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசாள வந்த அம்மன் கோயில் விழாவில் ... முத்துமாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலம் முத்துமாரி அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் குரு பூஜை பெருவிழா
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் குரு பூஜை பெருவிழா

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2023
03:07

அவிநாசி: சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குரு பூஜை பெருவிழா நடைபெற்றது.

ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் வரும் நாளை குருபூஜை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவிநாசி பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் 90 வது குருபூஜை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை மற்றும் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராண வரலாற்றை முறைப்படி பண்ணொன்ற முற்றும் ஓதுதல் முறையில் திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர். முன்னதாக செல்வ விநாயகர், பாதிரி மரத்தம்மன், சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், சண்டிகேஸ்வரர், நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் நான்கு ரத வீதியிலும் திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலை 7 மணி ஓதுவா மூர்த்திகள் உடன் பாராயணம் செய்தனர். 90 வது குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு அர்த்த ஜாம பூஜை அடியார்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar