Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் கோவில் திருவிழா; ... காமாட்சி அம்மன் கோவிலில் 48நாள் நடந்த மண்டல அபிஷேகம் நிறைவு காமாட்சி அம்மன் கோவிலில் 48நாள் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம்; பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் அழகர்கோவில் ராஜகோபுரம்!
எழுத்தின் அளவு:
கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம்; பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் அழகர்கோவில் ராஜகோபுரம்!

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2023
04:07

அழகர் கோவில்:  மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வாண்டு நடைபெற இருக்கும் நிலையில் ராஜகோபுரத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் சிறப்புமிக்கது ராஜகோபுரம். தற்போது வர்ணம் பூசும் பணி முடிவடைந்த நிலையில் கோபுர கலசங்களைப் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏழு படிநிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் 628 சிற்பங்கள் உள்ளன. இதில் ராமாயண, மகாபாரத கதைகள் மற்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை சித்தரிப்பதாக உள்ளது. கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற யுகங்களில் பெருமாளின் அவதாரங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. துவாபரயுகம்

இது குறித்து துணை ஆணையர் ராமசாமி கூறுகையில்: கடந்த 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்வாண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கான பணிகள் இன்னும் இரு மாதத்தில் முடிந்து விடும். இந்த கோபுரம் ஏழுபடி நிலைகளுடன் 120 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் மேல் பகுதியில் ஏழு கலசங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 6:15 அடி உயரம் கொண்டவை. இதன் ஏழாம் படிநிலையில், கோபுரத்தைக் குடை போல் காக்க கொடுங்கை அமைப்பு உள்ளது. மரத்தாலான இந்த கொடுங்கை சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது.ராஜகோபுரத்தின் மேல் எந்த திசையிலிருந்து மழை பெய்தாலும் மழைநீர் விழாமல் இது பாதுகாக்கிறது. தற்போது பழமை மாறாமல் பொள்ளாச்சி சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் கொண்டு சிமெண்ட் இல்லாமல் புனரமைத்து வருகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar