கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம்; பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் அழகர்கோவில் ராஜகோபுரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2023 04:07
அழகர் கோவில்: மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வாண்டு நடைபெற இருக்கும் நிலையில் ராஜகோபுரத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் சிறப்புமிக்கது ராஜகோபுரம். தற்போது வர்ணம் பூசும் பணி முடிவடைந்த நிலையில் கோபுர கலசங்களைப் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏழு படிநிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் 628 சிற்பங்கள் உள்ளன. இதில் ராமாயண, மகாபாரத கதைகள் மற்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை சித்தரிப்பதாக உள்ளது. கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற யுகங்களில் பெருமாளின் அவதாரங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. துவாபரயுகம்
இது குறித்து துணை ஆணையர் ராமசாமி கூறுகையில்: கடந்த 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்வாண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கான பணிகள் இன்னும் இரு மாதத்தில் முடிந்து விடும். இந்த கோபுரம் ஏழுபடி நிலைகளுடன் 120 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் மேல் பகுதியில் ஏழு கலசங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 6:15 அடி உயரம் கொண்டவை. இதன் ஏழாம் படிநிலையில், கோபுரத்தைக் குடை போல் காக்க கொடுங்கை அமைப்பு உள்ளது. மரத்தாலான இந்த கொடுங்கை சுண்ணாம்பு கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது.ராஜகோபுரத்தின் மேல் எந்த திசையிலிருந்து மழை பெய்தாலும் மழைநீர் விழாமல் இது பாதுகாக்கிறது. தற்போது பழமை மாறாமல் பொள்ளாச்சி சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் கொண்டு சிமெண்ட் இல்லாமல் புனரமைத்து வருகிறோம் என்றார்.