Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்தி நட்ட மரத்துக்கு வழிபாடு! திருமலையில் தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: பக்தர்களே உஷார்! திருமலையில் தரகர்களிடம் ஏமாற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடி பகவானுக்கு சோறு அபிஷேகம்: விநோத வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 அக்
2012
10:10

பெ.நா.பாளையம்: மழை வேண்டி இடி பகவானுக்கு, மோர், தயிர், சோறு கொண்டு அபிஷேகம் செய்து, வினோத வழிபாடு நடந்தது. பருவமழை பொய்த்ததால், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளம், குட்டைகள், நீரின்றி வறண்டு போயுள்ளன. மழை பெய்ய வேண்டி, ஆங்காங்கே, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள, வெள்ளக்கிணறு கிராமத்தில், மழைக்காக நேற்று வினோத பூஜை நடைபெற்றது. ஊர் மக்கள் ஒன்று கூடி, துடியலூர் ரோட்டில் உள்ள குமரன் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தினர். பின், பானையை ஏத்தியபடி வெள்ளக்கிணறுவில் வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களிடம் சோறு, தயிர், மோர் ஆகியவற்றை பெற்றனர். அவற்றை, வெள்ளக்கிணறுவில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று, வெள்ளக்கிணறு - சரவணம்பட்டியில் ரோட்டில் உள்ள இடி பகவான் கோவிலுக்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த சோறு, கம்பச்சோறு, தயிர், மோரால், இடி பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த வழிபாடு குறித்து பொதுமக்கள் கூறியதாவது: இக்கோவில் பழமையானது. மழையின்றி, எப்போதெல்லாம் வறட்சி ஏற்படுகிறதோ, அப்போது தயிர், மோர், கம்பு சோறு போன்ற குளிர்ந்த பொருட்களை பெற்று வந்து, இடி பகவானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இறைவன் குளிர்ந்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar