Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் குவிந்த ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2023
10:07

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருமணமாகாத ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்று சென்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும்,பூப்பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை ஆனந்தவல்லி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே உலா வந்தார். அப்போது ஏராளமானோர் அம்மனை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு மண்டகப்படி நேற்று நடைபெற்றதை முன்னிட்டு கோயில் முன்பாக மண்டகப்படி அமைக்கப்பட்டு அங்கு ஆனந்தவல்லி அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து விருஷப வாகனத்தில் சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுத்தார்.பின்னர் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமியை சுற்றி 3 முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்றுச் சென்றால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுவதால் ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 
temple news
எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். இந்த வருடம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar