பதிவு செய்த நாள்
08
அக்
2012
10:10
புதுச்சேரி: ராமானுஜர் ரத யாத்திரை, கூடப்பாக்கம் கிராமத்தில் இன்று நடக்கிறது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, வரும் 2017ம் ஆண்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு அமைத்து, பல்வேறு இடங்களில் ரத யாத்திரை, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அரியாங்குப்பம், நவசக்தி டவுன்ஷிப் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து, 4வது ரத யாத்திரைக்கு, வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடப்பாக்கத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப்பெருமாள் கோவிலில் இருந்து ராமானுஜர் ரத யாத்திரை இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டு, கூடப்பாக்கத்தின் அனைத்து வீதிகளிலும் செல்கிறது. ரத யாத்திரையை தொடர்ந்து, மாலை 3 மணியளவில், கூடப்பாக்கம் மந்தைவெளி திடலில், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சபையினரின் சிறப்பு பஜனை, 5 மணிக்கு அன்னமாச்சாரியார் வாசவி மகிளா சபையின் கீர்த்தனை, 6 மணிக்கு ஜெகதீசன் தலைமையில் பஜனை, 7 மணிக்கு சாந்தலட்சுமியின் உபன்யாசம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கூடப்பாக்கம் மாரியம்மன் கோவில் சிறப்பு அதிகாரி ஹரி ஹரி நமோநாராயணா மற்றும் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.