Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி வெங்கடாஜலபதிக்கு தினமும் ... வேதாரண்யம் புனித செபஸ்தியார் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லூர் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2012
10:10

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு ஊராட்சி நெல்லூர் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நான்கு நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு ஊராட்சியில் உள்ளது நெல்லூர் கிராமம். வறுமை, கல்வியறிவு இல்லாமல் கிராமத்தினர் வாழ்ந்து வந்தனர். இவ்வூரில் காவல் கொண்டிருக்கும் முத்தாலம்மனை 50 ஆண்டுகளுக்கும் மேல், ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நான்கு நாட்கள் விழா எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.அனைத்து சமூகத்தினரும் முத்தாலம்மனுக்கு சேவை செய்து வருகின்றனர்.""சீர்பெருகும் முத்தாலம்மன் திருப்பாதத்தைபார்புகழ் துதித்து போற்றுவோர்க்கு கார்பெருகிநிலம் செழித்து வளமை பெற்றுநலம் செழிக்க வாழ்குவாறேமேற்சொன்ன பாடலுக்கு ஏற்ப அம்மன் அருளால் இவ்வூர் மக்கள் நல்ல முன்னேற்றத்தையும், கல்வி அறிவையும் பெற்று, தற்போது பெங்களூரு, சென்னை, கோவை, கடலூர், பாண்டிச்சேரி என பல ஊர்களில் நல்ல வசதிகளுடன் வசித்து வருகின்றனர். சிலர் சினிமா துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளனர். கும்பாபிஷேகம்: தங்களை காத்து வரும் அம்மனுக்கு, நன்றி கடனாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட கோபுரம் அமைத்து, கும்பாபிஷேகம் நடத்தினர்.இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா நேற்று இரவு துவங்கியது. ஊர்கால சுவாமி அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டப்பட்டது. இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஊர்கால சுவாமிக்கு படைக்கபட்ட அன்ன பிரசாதம், கோயில் வரி கொடுத்த கிராமத்தினருக்கு இன்று காலையில் வீடு, வீடாக வழங்கப்படுகிறது. இரவு முத்தாலம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்படுகிறார்.

நேர்த்தி கடன்: நாளை மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து, கும்மிப்பாட்டுடன் பெண்கள் அம்மனை வழிபடுகின்றனர். இதனை தொடர்ந்து தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். பகல் 2 மணிக்கு பொங்கல் வைத்து, அம்மனுக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறதுநாளை மறுதினம் வியாழக்கிழமை அம்மன் முன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் காலை முதல் மாலை வரை பல வேஷமிட்டு களிப்பூட்டும் நிகழ்ச்சியுடன், அம்மன் பூஞ்சோலை செல்கிறார்.

ஏற்பாடு: நான்கு நாட்கள் திருவிழா ஏற்பாடுகளை நாட்டாமை கந்தவேல் அன் சன்ஸ், பூசாரி ராமகிருஷ்ணன் அன் சன்ஸ், பூசாரி சுந்தராஜ் அன் சன்ஸ், காவல் காரர் சிங்காரம் அன்சன்ஸ், சேகர், ஜெயராஜ், தங்கப்பாண்டி, சின்னச்சாமி, தெய்வேந்திரன், நம்பூதிரிபாட், செல்லத்துரை, ஆர்.ஓ. சின்னச்சாமி, ஜெயராமன், அக்கினி, மொக்கப்பாண்டி, மாயாண்டி, அம்மன்மாயாண்டி, உடையாளிமுருகன், ஜெயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  சிவகங்கை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிபூரம் திருவிழா யொட்டி அம்மனுக்கு மகா தீபாரதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar