பதிவு செய்த நாள்
09
அக்
2012
10:10
ஸ்ரீபெரும்புதூர்:துரைபெரும்பாக்கம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மூலவர், ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வீதி உலா வந்தார். காவேரிபாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கம் கிராமத்தில், ஏலகிரி தாயார் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய, ஏழு அடி உயரம் கொண்ட, ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலவ மூர்த்தி, ராமானுஜருடன், கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, கிராமங்கள் தோறும் திரு வீதியுலா வருகிறார். நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய பெருமாளை, ஏராளமானோர் வழிபட்டனர்.இதுகுறித்து, ஏலகிரி தாயார் அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில் துரைபெரும்பாக்கத்தில், ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும், என்றார்.