முன்னோருக்கு நாம் கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை சேர்ப்பவர் சூரியன். அதனால் சூரியனுக்கு ‘பிதுர் காரகர்’ என்று பெயர். அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது கைகளால் நீரை அள்ளி கீழே விடுவது நன்மை தரும். இதை ‘அர்க்கியம்’ என்பர். புனித நதிகளில் நீராடும் போது முழங்கால் அளவுக்கு நீரில் நின்றபடி சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். உடல்நலம், ஆத்மபலம் ஏற்படும். தந்தை, மகன் உறவு பலம் பலப்படும்.