மகன் இறந்த சோகத்தில் இருந்தனர் உருசுலா தம்பதியினர். ஒருநாள் வீட்டின் வாசலில் இசை ஒலிக்கும் சப்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்த போது கிழிந்த ஆடையுடன் சிறுவன் ஒருவன் வயலின் இசைப்பதை கண்டு அவனுக்கு உணவு உடையும் கொடுத்தனர். அவனிடம் என்மகன் இறந்து விட்டான் எங்களுடனே இருக்கிறியா என கேட்டனர். அதற்கு சிறுவன், என் பெற்றோரிடம் அனுமதி பெற்று வருவதாக சொன்னான். தம்பதிகளிடம் வளர்ந்த அவன் மதபோதகராக பணியாற்றினான். அவனே பின்னாளில் உலகை கலக்கிய மார்ட்டின் லுாதர் கிங்.